தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி சுமார் 40000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாமர மக்களை மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் அவ்வப்போதுப் பாதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும், அதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

என் புருஷன் சாவுக்கு அரசும், அந்த ஹோட்டலும் தான் காரணம்: ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் பேட்டி

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியதும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான சர் எவர்டன் வீக்ஸ் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்

அங்க போயுமா??? உயர்சாதி இந்துக்கள் சாதிப்பாகுபாடு காட்டடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ சிண்டம்ஸ் இன்க் (CSO.Co) நிறுவனத்தில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அம்மா.. உண்மையை தைரியமா சொல்லும்மா: அதிரடி காட்டிய ரேவதியின் மூத்த மகள்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு பெரும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு

தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக சிபிசிஐடி இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்