close
Choose your channels

தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Thursday, July 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி சுமார் 40000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாமர மக்களை மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களையும் அவ்வப்போதுப் பாதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான் ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும், அதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos