போனிகபூர் வீட்டில் உள்ள நபருக்கு கொரொனா: அதிர்ச்சி தகவல்

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற போது திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள போனிகபூர் வீட்டில் பணி செய்யும் 23 வயது நபர் ஒருவருக்கு திடீரென கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து போனிகபூர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போனிகபூர் அவர்களின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 23 வயது நபர் ஒருவர் சமீபத்தில் உடல் நலமின்றி இருந்தால் உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மும்பை கார்ப்பரேஷன் அவருக்கு தேவையான ஆலோசனையை வழங்கி வருகிறது. மேலும் போனிகபூர் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை எனினும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் போனிகபூர் வீட்டில் இருந்த கொரோனாவால் தாக்கப்பட்ட நபர் விரைவில் குணமடைவார் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இவ்வாறுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News

பிரதமர் மீது கல்லெறிந்தால் இதுதான் நடக்கும்: ஜோதிமணி எம்பிக்கு நடிகை எச்சரிக்கை

நேற்று தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தின் போது கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

கமல் கொடுத்த கிஃப்ட்: மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்க நடிகை

உலகநாயகன் என்ற பெயருக்கு ஏற்ப நடிகர் கமல்ஹாசனின் புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பது தெரிந்ததே. உலக சினிமா பிரபலங்கள் அனைவரும் கமல்ஹாசனையும் அவரது திறமையையும் அறிந்து வைத்துள்ளனர்.

ஓடிடியில் வெளியாகிறது அமிதாப்பச்சனின் அடுத்த படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்

லாக்டவுனுக்கு பின் காதலரை கைப்பிடிக்கின்றாரா வரலட்சுமி?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமியின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளி வந்து கொண்டே இருக்கும்.

10ஆம் வகுப்பு தேர்வில் திடீர் மாற்றம்: புதிய அட்டவணை

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்