close
Choose your channels

போனிகபூர் வீட்டில் உள்ள நபருக்கு கொரொனா: அதிர்ச்சி தகவல்

Tuesday, May 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற போது திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள போனிகபூர் வீட்டில் பணி செய்யும் 23 வயது நபர் ஒருவருக்கு திடீரென கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து போனிகபூர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போனிகபூர் அவர்களின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 23 வயது நபர் ஒருவர் சமீபத்தில் உடல் நலமின்றி இருந்தால் உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மும்பை கார்ப்பரேஷன் அவருக்கு தேவையான ஆலோசனையை வழங்கி வருகிறது. மேலும் போனிகபூர் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை எனினும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் போனிகபூர் வீட்டில் இருந்த கொரோனாவால் தாக்கப்பட்ட நபர் விரைவில் குணமடைவார் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இவ்வாறுஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.