ஓபிஎஸ் ஆதரவு நாமக்கல் அதிமுக எம்பிக்கு உற்சாக வரவேற்பு

  • IndiaGlitz, [Wednesday,February 22 2017]

கடந்த சனிக்கிழமை நடந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களுக்கு ஒருபுறம் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொருபுறம் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்களுக்கும் மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் அதிமுக எம்பி சுந்தரம் அவர்கள் இன்று ராசிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பெருந்திரளாக கூடியிருந்த மக்கள் அவருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாக அளித்தனர்.

மக்கள் உற்சாகத்தில் இருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்த சுந்தரம் எம்பி, பேசியபோது, 'மக்களின் உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். ஏற்கனவே இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அதிமுக எம்பிக்கள் அனைவரும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களையும் மீறி ஓபிஎஸ் அணி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

கபாலியுடன் கனெக்சன் ஆகும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேலைக்காரன்' பட டைட்டிலை தேர்வு செய்த சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படக்குழு தற்போது ரஜினியின் லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் படமான 'கபாலி' படப்பிடிப்பு நடந்த மலேசியாவை அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான லொகேஷனாக தேர்வு செய்துள்ளனர்...

சிபிராஜின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்

'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன சிபிராஜ், அதன்பின்னர் 'ஜாக்சன் துரை' படத்தில் நடித்தார். தற்போது அவர் 'கட்டப்பாவ காணோம்' மற்றும் 'சத்யா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிபிராஜின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது...

பாவனா தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி கோவையில் பதுங்கலா?

பிரபல நடிகை பாவனா கடந்த வாரம் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அவரை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது

அடக்கி வாசிக்க நினைத்தேன். ஆனால் பேச வைக்கின்றார்கள். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் நிகழ்வுகள் குறித்து தனது ஆக்கபூர்வமான கருத்துக்கலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

புதிய தமிழக அரசுக்கு சத்யராஜ் வைத்த முக்கிய கோரிக்கை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி செய்து வருகிறது.