close
Choose your channels

ஓபிஎஸ் ஆதரவு நாமக்கல் அதிமுக எம்பிக்கு உற்சாக வரவேற்பு

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சனிக்கிழமை நடந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களுக்கு ஒருபுறம் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொருபுறம் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்களுக்கும் மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் அதிமுக எம்பி சுந்தரம் அவர்கள் இன்று ராசிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பெருந்திரளாக கூடியிருந்த மக்கள் அவருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாக அளித்தனர்.

மக்கள் உற்சாகத்தில் இருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்த சுந்தரம் எம்பி, பேசியபோது, 'மக்களின் உற்சாக வரவேற்புக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். ஏற்கனவே இவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அதிமுக எம்பிக்கள் அனைவரும் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களையும் மீறி ஓபிஎஸ் அணி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.