close
Choose your channels

ஆளுனர் மாளிகையில் ஓபிஎஸ். ராஜினாமா குறித்து விளக்கம் அளிப்பார் என தகவல்

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் சற்று முன்னர் மும்பையில் இருந்து சென்னை வந்தடைந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு கவர்னரை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி சற்றுமுன்னர் ஓபிஎஸ் அவர்கள் தனது இல்லத்தில் இருந்து கிளம்பி ஆளுனர் மாளிகையை வந்தடைந்தார். இந்த சந்திப்பில் தனது ராஜினாமா மிரட்டி வாங்கப்பட்டதாக அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் குறித்த விளக்கத்தையும் அவர் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆளுனர் மாளிகைக்கு சென்ற முதல்வருடன் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.