close
Choose your channels

தென்னிந்தியாவில் நுழையும் மணியோசை: அமித்ஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

Tuesday, May 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, அக்கட்சி தென்னிந்தியாவில் நுழைவதற்கான மணியோசை போல் உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவை பாஜகதான் பின்னணியில் இருந்து இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் பாஜகவை தென்னிந்தியாவிற்குள் நுழைய விடமாட்டோம் என்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன,

இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து ஓபிஎஸ் கூறுகையில், 'தென்னிந்தியாவில் பிரம்மாண்ட நுழைவிற்கான மணியோசை போல் கர்நாடகாவில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துகிறேன்” என பாஜக தலைவர் அமித்ஷாவிற்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் என்றும் கர்நாடகாவின் புதிய முதல்வரை விரைவில் சந்தித்து காவிரி நீரை வழங்குவது குறித்து வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.