ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Wednesday,September 09 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும், வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகத்துக்கு உரிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் பலர் தங்களது திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ’சீதக்காதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய அடுத்த திரைப்படம் ‘ஒரு பக்க கதை’. இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் சசியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஹீரோ!

இயக்குனர் சசி இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

ஜிவி பிரகாஷ் - தனுஷ் கூட்டணியில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

கோலிவுட் திரையுலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி கொண்டு வருகிறது என்பதும்,

சுஷாந்த் உயிருடன் இருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்: தனுஷ் நாயகியின் அதிர்ச்சி டுவீட்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தற்போது போதைப்பொருள் வழக்காக மாறி வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தி தெரியாது போடா' டீசர்ட்: ஆர்டர் கொடுத்தது கனிமொழி, உற்பத்தி செய்து கொடுத்தது திமுக நிர்வாகி!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டான 'இந்தி தெரியாது போடா' மற்றும் 'ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்' ஆகிய வாசகங்களை கொண்ட டீசர்ட்களை திரையுலக பிரபலங்கள் அணிந்தது

நீங்கள் தேர்வு செய்த வழி சரியானது: பிசி ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலடி!

பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார். சுஷாந்த் தற்கொலை உள்பட அவர் கூறிய சில கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்