பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய விரும்புகிறாரா ஓவியா?

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் திரையுலகில் வாய்ப்புகள் பெறலாம் என்றும், வாய்ப்புகள் தானாகவே கொட்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடந்த மூன்று சீசன்களில் டைட்டில் பட்டம் வென்ற ஆரவ், ரித்விகா மற்றும் முகின் உள்பட ஒருசிலரை தவிர வேறு எந்த போட்டியாளர்களும் திரையுலகில் பெரிய வாய்ப்புகளை பெறவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் என்றால் அது ஓவியா தான். முதல்முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது முதல் அவர் போட்டியில் இருந்து வெளியேறியதும் லட்சக்கணக்கானோர் கண்டனம் தெரிவித்தது அவரை அவருக்கு ஆதரவுக்குரல்கள் குவிந்தது

இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் பெரும் புகழ் பெற்ற ஓவியா, திடீரென தனது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்யலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

டி.ஆர்.பிக்காக போட்டியாளர்களை டார்ச்சர் செய்து அவர்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கும் நிலைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓவியாவின் இந்த கேள்விக்கு ரசிகர்கள் பல்வேறு பதில்களை அளித்து வருகின்றனர். பிக்பாஸ் இல்லையென்றால் நீங்கள் இந்த அளவுக்கு புகழ் பெற்று இருக்க முடியாது என்று சிலரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு தகுந்தவாறு விதிகள் மாற்றப்படுவதாகவும், டி.ஆர்.பிக்காக போட்டியாளர்கள் மனதளவில் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும்புகழ் பெற்ற ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த 'தெறி' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

அமெரிக்க காவலில் சிக்கிக் கொண்ட சீனாவின் பெண் விஞ்ஞானி!!! தொடரும் பரபரப்பு???

கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அமெரிக்கா சீனாவின் மீது குற்றம்சாட்டத் தொடங்கியதில் இருந்தே ஒட்டுமொத்த உலக நாடுகளும் இரு பிரிவாக காட்சியளிக்கின்றன

2 லட்சத்தை தாண்டியது தமிழக கொரோனா பாதிப்பு: குணமானோர் எண்ணிக்கையும் உயர்வதால் மக்கள் நிம்மதி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 5000, 6000 என அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 7000 பேர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள விஷால்! பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

லாவண்யாவுடன் திருமணம், தமன்னாவுடன் தொடர்பு: பரபரப்பு பேட்டி அளித்த நடிகர் கைது!

நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்ததாகவும் அவர் மூன்று முறை கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்ததாகவும் தமன்னா உள்பட பல நடிகைகள் என்னுடன் தொடர்பு இருந்ததாகவும்