close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய விரும்புகிறாரா ஓவியா?

Sunday, July 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் திரையுலகில் வாய்ப்புகள் பெறலாம் என்றும், வாய்ப்புகள் தானாகவே கொட்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடந்த மூன்று சீசன்களில் டைட்டில் பட்டம் வென்ற ஆரவ், ரித்விகா மற்றும் முகின் உள்பட ஒருசிலரை தவிர வேறு எந்த போட்டியாளர்களும் திரையுலகில் பெரிய வாய்ப்புகளை பெறவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் என்றால் அது ஓவியா தான். முதல்முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது முதல் அவர் போட்டியில் இருந்து வெளியேறியதும் லட்சக்கணக்கானோர் கண்டனம் தெரிவித்தது அவரை அவருக்கு ஆதரவுக்குரல்கள் குவிந்தது

இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் பெரும் புகழ் பெற்ற ஓவியா, திடீரென தனது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்யலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

டி.ஆர்.பிக்காக போட்டியாளர்களை டார்ச்சர் செய்து அவர்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கும் நிலைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓவியாவின் இந்த கேள்விக்கு ரசிகர்கள் பல்வேறு பதில்களை அளித்து வருகின்றனர். பிக்பாஸ் இல்லையென்றால் நீங்கள் இந்த அளவுக்கு புகழ் பெற்று இருக்க முடியாது என்று சிலரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு தகுந்தவாறு விதிகள் மாற்றப்படுவதாகவும், டி.ஆர்.பிக்காக போட்டியாளர்கள் மனதளவில் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும்புகழ் பெற்ற ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.