பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் கதை அரசியலா? பட்ஜெட் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Sunday,February 18 2024]

இயக்குனர் பா ரஞ்சித், விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் ரிலீசுக்கு கிட்டத்தட்ட தயாராக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை தேர்தல் பரபரப்புக்கு இடையே ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தங்கலான்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே பா. ரஞ்சித் அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணியையும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா ரஞ்சித்தின் அடுத்த படம் அரசியல் மற்றும் தாதா களத்தில் அமையும் கதை அம்சம் என்றும் அது மட்டும் இன்றி மல்டி ஸ்டார் படமாகவும் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் குறித்து பா ரஞ்சித் தயாரிப்பாளர்களிடம் கூறிய போது 50 கோடி ரூபாய் என்று கூறியதால் ஒரு சில தயாரிப்பாளர்கள் பின்வாங்கினாலும் பா.ரஞ்சித் இயக்கம், மல்டிஸ்டார் நடிப்பு மற்றும் அரசியல் தாதா கதை என்பதால் முதலீடு செய்ய சில தயாரிப்பாளர்கள் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே பா. ரஞ்சித் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்யை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிய வெற்றிமாறன்.. 'தளபதி 69' கன்பர்ம்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி, ஹெச் வினோத் உள்ளிட்டோர்களில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த பட்டியலில்

'அமரன்' படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவியின் எமோஷனல் பதிவு.. ராஜ்குமார் பெரியசாமியின் ரியாக்சன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில்

வருங்காலத்தில் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்: பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ்..!

தனது தந்தையை எஸ்பி பாலசுப்பிரமணியன் குரலை தனது அனுமதி இன்றி பயன்படுத்திய பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

'கேப்டன்' மறைந்த சோகம்.. மனதை தேற்றி கொண்டு மீண்டும் களத்தில் இறங்கிய  சண்முக பாண்டியன்..!

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மகன் சண்முக பாண்டியன் தந்தை மறைவை அடுத்து மனதை தேற்றிக்கொண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல

சென்னை கல்லூரியில் திடீர் விசிட் அடித்த சமந்தா.. மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு..!

நடிகை சமந்தா சென்னையில் உள்ள கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த நிலையில் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.