பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் கதை அரசியலா? பட்ஜெட் இத்தனை கோடியா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இயக்குனர் பா ரஞ்சித், விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் ரிலீசுக்கு கிட்டத்தட்ட தயாராக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை தேர்தல் பரபரப்புக்கு இடையே ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’தங்கலான்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே பா. ரஞ்சித் அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணியையும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா ரஞ்சித்தின் அடுத்த படம் அரசியல் மற்றும் தாதா களத்தில் அமையும் கதை அம்சம் என்றும் அது மட்டும் இன்றி மல்டி ஸ்டார் படமாகவும் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் பட்ஜெட் குறித்து பா ரஞ்சித் தயாரிப்பாளர்களிடம் கூறிய போது 50 கோடி ரூபாய் என்று கூறியதால் ஒரு சில தயாரிப்பாளர்கள் பின்வாங்கினாலும் பா.ரஞ்சித் இயக்கம், மல்டிஸ்டார் நடிப்பு மற்றும் அரசியல் தாதா கதை என்பதால் முதலீடு செய்ய சில தயாரிப்பாளர்கள் முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே பா. ரஞ்சித் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments