வித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்சன் திரில்லர் படம்

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

'இளைஞன்' படத்தை அடுத்து பாடலாசிரியர் பா.விஜய் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ஆருத்ரா'. வித்தியாசமான ஆக்சன் த்ரில் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். மேலும் கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன் துப்பறியும் நிபுணர்கள் கேரக்டரில் நடித்துள்ளனர். நடிகர் விக்னேஷ், ஒய் ஜி மகேந்திரன், மயில்சாமி, அபிசேக், கண்ணன்,  பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர் ஏஸ் ஏ சந்திரசேகர், மீரா கிருஷ்ணா, சஞ்சனா சிங், பேபி யுவா, ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடித்திருக்கிறார்கள்.

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ள இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடுகின்றனர். இந்த படம் குறித்து வித்தக கலைஞர் பா.விஜய் கூறியதாவது:

'ஸ்ட்ராபெர்ரி' படத்தைத் தொடர்ந்து என்னுடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் ‘ஆருத்ரா’. இந்த படத்தில் என்னுடைய தந்தையாக வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்  நடித்திருக்கிறார். நான் சிவமலை என்ற கேரக்டரில் தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில்  பணியாற்றும் ஊழியராக நடித்திருக்கிறேன். ‘ஆருத்ரா ’ ஒரு எமோஷனல் வித் க்ரைம் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கிறது. இதில் இயக்குநர் கே பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக சுவராசியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். ‘ஸ்ட்ராபெர்ரி ’யில் எப்படி ஒரு சமூக கருத்தை அழுத்தமாக பதிவு செய்தேனோ, அதே போல் இந்த ‘ஆருத்ரா’விலும் சமூகக்கருத்து ஒன்றை அக்கறையுடன் மையப்படுத்தியிருக்கிறேன்.

இரண்டு மூன்று சம்பவங்களை பார்த்து, கேட்டு, படித்த பின் தான் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுத தொடங்கினேன். எழுதி முடித்தபின் இந்த திரைப்படத்தை நானே இயக்க திட்டமிட்டேன். சென்னை, பாண்டிசேரி, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஹரித்துவார், குலு, மணாலி ஆகிய இடங்களில் படபிடிப்பு நடைபெற்றது. மொத்தம் எண்பத்தைந்து நாள்கள் படபிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தில் நாற்பது நிமிடத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவிருப்பதால் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஆருத்ரா என்பது ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர். இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகள் என்று தனியாக எந்த காட்சிகளும் இல்லை. இந்த படத்தில் கே பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்புறிவாளர்களாக திரையில் தோன்றி, ரசிகர்களை அதகளப்படுத்துவார்கள். இந்த படம் அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு செய்தியை கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதையை பெற்றோர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதையும் தெரிந்துகொள்வார்கள். சிறிது இடைவெளிக்கு பின் இந்த படத்தின் மூலம் நடிகர் விக்னேஷ் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிட்டோம். இதற்கு பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. படத்தின் டீஸரை வரும் புத்தாண்டு தினத்தன்று துபாயில் வெளியிடவிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். பொங்கலுக்கு பிறகு திரையிட திட்டமிட்டு வருகிறோம். இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்கள்.’

இவ்வாறு பா.விஜய் கூறியுள்ளார்.

More News

பஸ் ஸ்டிரைக்: விஷாலுக்கு ஏற்பட்ட அச்சம்

நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் அறிவிக்கப்படாத திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கமல் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு ஏன்?

உலக நாயகன் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொங்கலுக்கு அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசு: பஸ் ஸ்டிரைக் குறித்து கமல்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய போக்குவரத்து ஊழியர்களிடம் நேற்று தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று மாலை முதல் அறிவிக்கப்படாத

'காக்க காக்க' படம் பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது: விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

தமிழ் சினிமா பிரபலங்கள் போதைக்கு அடிமையா? திடுக்கிடும் தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமா பிரபலங்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதாகவும், சப்ளை செய்வதாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தது தெரிந்ததே.