இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இந்திய மனைவியும், பாகிஸ்தான் கணவரும்!


Send us your feedback to audioarticles@vaarta.com


நேற்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியை, ஒரு போட்டி போல் பார்க்காமல், போர் போல் பார்த்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண ஒரு ஜோடி வந்திருந்தனர். இவர்களில் கணவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதும் மனைவி இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் நிலையில் இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க இங்கிலாந்து சென்றிருந்தனர்.
இவர்கள் இருவரும் இந்தியா-பாகிஸ்தான் ஜெர்ஸிகளை மிக்ஸ் செய்து அணிந்திருந்தனர். இந்த உடை மைதானத்தில் போட்டியை காண வந்த அனைவரையும் கவர்ந்தது. இருவரும் அவரவர் அணிக்கு உற்சாகம் தெரிவித்து வந்தனர் என்பதும் போட்டி முடிந்த பின்னர் இந்தியாவின் வெற்றிக்கு மனைவிக்கு கணவர் வாழ்த்து கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments