பாகிஸ்தானில் பஞ்சாயத்து தலைவர் கூறிய பலாத்கார தீர்ப்பு

  • IndiaGlitz, [Friday,July 28 2017]

மனித இனம் 21ஆம் நூற்றாண்டை நோக்கி நாகரீக மற்றும் டெக்னலஜியுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் மட்டும் இன்னும் பழமைவாதத்தில் ஊறியிருக்கின்றது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முஜாபராபாத் நகரின் பஞ்சாயத்து தலைவர் சொன்ன தீர்ப்பை எடுத்து கொள்ளலாம்
இந்த பகுதியில் உமர் என்ற இளைஞர் அஷ்பக் என்பவரின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இந்த வழக்கை விசாரித்த பஞ்சாயத்து தலைவர் அஷ்பக்கை அழைத்து உமரின் தங்கையை பலாத்காரம் செய்ய தீர்ப்பு கூறினார். அதன்படியே இந்த கொடுமையும் நடந்துவிட்டது.
இந்த சம்பவம் குறித்து உமர் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்த நிலையில் தற்போது பஞ்சாயத்து தலைவர் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றம் நிரூபணம் ஆனால் பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கும் மரண தண்டனையும் மற்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் என்பவர் இதுகுறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி பஞ்சாப் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை செய்த பஞ்சாப் முதல் மந்திரியான ஷெரீப், முதல் சிறுமி பாதிக்கப்பட்ட உடனேயே போலீசார் குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்திருந்தால் 2வது சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்காது என கூறி அந்த பகுதிக்கு உட்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் பிரபல நடிகை?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் கடந்த சில நாட்களாகவே ஓவியாவின் பெயரை டேமேஜ் ஆக்கவும், அவருக்கு டார்ச்சர் கொடுத்த காயத்ரி மற்றும் ஜூலியை நல்லவர்களாக மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது...

செப்டம்பரில் சிம்புவின் அடுத்த படம் ரிலீஸ்

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததை அடுத்து, சிம்புவின் அடுத்த படம் 'கெட்டவன்' என்றும் 'பில்லா 3' என்றும் வதந்திகள் பரவியது. இந்த வதந்திக்கு சமீபத்தில் சிம்பு தனது டுவிட்டரில் முற்றுப்புள்ளி வைத்தார்...

விஷால்-லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் பணிகள், நடிகர் சங்கத்தின் பணிகளுக்கு இடையே 'துப்பறிவாளன்' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் லிங்குசாமியின் இயகத்தில் 'சண்டக்கோழி 2' படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்...

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தில் நடித்து வருகிறார்...

ரஜினிக்காக 1450 கிமீ சைக்கிள் ஓட்டும் ஆர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...