'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகை திடீர் விலகல்.. இவருக்கு பதில் இவர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் திடீரென விலகுவதும் இதனை அடுத்து அந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று ஒரே ஒரு டைட்டில் கார்டு மட்டும் போட்டுவிட்டு சீரியலை நகர்த்திக் கொண்டு செல்வது என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சீரியலை பார்க்கும் பார்வையாளர்களும் இதற்கு பழகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து திடீரென ஒரு நடிகை விலகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவருக்கு பதில் நடிக்க இருக்கும் நடிகை யார் இந்த குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாரி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ரிஹானா. இவர் கேரக்டர் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் நான் இந்த சீரியலில் இருந்து விளக்குகிறேன் என்றும் இந்த கேரக்டரில் தொடர்ந்து நடிக்க வேண்டிய நிலையில் எனக்கு வேறு வேலைகள் இருப்பதால் இந்த தொடரில் என்னால் நடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் எல்லோரையும் போல் நானும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலியை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்றும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் ரிஹானாவுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்த நிலையில் அதிலிருந்து அவர் விலகுவது துரதிஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரிஹானா நடித்த கேரக்டரில் தற்போது மாதவி என்ற நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சன் டிவியில் ’இனியா’ என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

துல்கர், ஜெயம்ரவியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் விலகலா? என்ன நடக்குது 'தக்லைஃப்' படத்தில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு

தனுஷை மகன் என கோரிய மதுரை தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. என்ன நடந்தது?

நடிகர் தனுஷை தனது மகன் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாவின் 'வணங்கான்' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. அருண் விஜய்யின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்

'சிங்கம் 4' படம் குறித்து ஏமாற்றமான செய்தி சொன்ன ஹரி.. ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட்..!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான 'சிங்கம்' படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தின்  இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் வெளியாகி

உறுதியாகிவிட்டதா 'ஜெயிலர் 2' படம்? டைட்டில் நியூஸ் எல்லாம் வந்துருச்சே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்