'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகை திடீர் விலகல்.. இவருக்கு பதில் இவர் யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் திடீரென விலகுவதும் இதனை அடுத்து அந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று ஒரே ஒரு டைட்டில் கார்டு மட்டும் போட்டுவிட்டு சீரியலை நகர்த்திக் கொண்டு செல்வது என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சீரியலை பார்க்கும் பார்வையாளர்களும் இதற்கு பழகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் டிவியில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து திடீரென ஒரு நடிகை விலகி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவருக்கு பதில் நடிக்க இருக்கும் நடிகை யார் இந்த குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மாரி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ரிஹானா. இவர் கேரக்டர் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் நான் இந்த சீரியலில் இருந்து விளக்குகிறேன் என்றும் இந்த கேரக்டரில் தொடர்ந்து நடிக்க வேண்டிய நிலையில் எனக்கு வேறு வேலைகள் இருப்பதால் இந்த தொடரில் என்னால் நடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் எல்லோரையும் போல் நானும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலியை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்றும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் ரிஹானாவுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்த நிலையில் அதிலிருந்து அவர் விலகுவது துரதிஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரிஹானா நடித்த கேரக்டரில் தற்போது மாதவி என்ற நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சன் டிவியில் ’இனியா’ என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments