சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் 51 நாட்கள் நீண்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்

வெயில், மழை எங்களுடைய வேலையை நிறுத்தவில்லை என்றும், என்ன ஒரு கடுமையான உழைப்பாளி அணியுடன் நான் பணிபுரிந்து இருக்கின்றேன் என்றும், நம்பமுடியாத உழைப்பை அனைவரும் கொட்டி கொடுத்தார்கள் என்றும், குறிப்பாக சூர்யா, சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பாண்டியன் உட்பட அனைவருக்கும் எனது நன்றி என்றும் நடிகர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் தெரிவித்துள்ளார்

’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும், மேலும் இந்த படத்தில் சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், புகழ், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தந்தை மறைவுக்கு பின் நடிகை ரவீனா பதிவு செய்த நெகிழ்ச்சியான வீடியோ!

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகை ரவீனா ரவியின் தந்தை ரவீந்திரநாத் சில மணி நேரங்களுக்கு முன்னர் திடீரென காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' மற்றும் விக்னேஷ் சிவனின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்பட 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும்

கமல்ஹாசனின் 'விக்ரம்' பட பாணியில் படத்தை தொடங்கும் அட்லி!

கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் பாணியில் அட்லி தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

விஷால் படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் இதுதான்; தயாரிப்பாளர் யார் தெரியுமா?

நடிகர் விஷால் நடித்து வரும் 31ஆவது திரைப்படம் 'வீர்மே வாகை சூடும்' என்ற திரைப்படம் என்றும் து.பா.சரவணன் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. 

பாரா ஒலிம்பிக் போட்டி: தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதக்கம்!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்