close
Choose your channels

மகனை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய ஒட்டு மொத்த குடும்பமே கைது!

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடிபோதை அடிக்கடி தகராறு செய்த மகனை பெற்றோர்களும், அவர்களுடைய மற்ற இரண்டு மகன்களும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியதால் ஒட்டுமொத்த குடும்பமே தற்போது ஜெயிலில் உள்ளனர்.

அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மணிக்கு தமிழ்மணி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களில் இரண்டாவது மகன் மகேஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். மற்ற இருவரும் உள்ளூரில் வேலை பார்த்தனர்.

இந்த நிலையில் சிங்கபூரில் இருந்து சமீபத்தில் அவருடைய இரண்டாவது மகன் மகேஷ் ஊருக்கு வந்துள்ளார். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்றும் குடித்துவிட்டு அவர் தகராறு செய்ததால் மணியும் அவருடைய இரண்டு மகன்களும் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் மகேஷ் படுகாயம் அடைந்து மரணம் அடைந்துவிட்டார்.

இந்த நிலையில் இறந்த மகனை தூக்கில் தொங்க வைத்து அவர் தற்கொலை செய்ததாக குடும்பத்தினர் நாடகமாடியுள்ளனர். ஆனால் ஒருசிலர் மகேஷ் தலையில் உள்ள காயத்தை பார்த்து சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் அளித்ததால் போலீசார் விரைந்து வந்த போலீசார் மகேஷின் தாய், தந்தை மற்றும் இரு சகோதரர்களிடமும் தீவிர விசாரணை செய்தனர். இதனையடுத்து மகேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வர ஒட்டுமொத்த குடும்பத்தினர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.