300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை ஊழியர்கள்

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

உபி மாநில மருத்துவமனை ஒன்றின் ஊழியர்கள் 300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளி ஒருவரை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்து போகும்போது ரூ.4000 மருத்துவக் கட்டணம் கட்ட வேண்டும் மருத்துவ ஊழியர்கள் கூறினார்கள். ஆனால் மருத்துவ கட்டணத்தில் ரூ.300 எண்ட்ரி கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அந்த பணத்தை கட்ட முடியாது என்றும் ரூ.3700 தான் கட்ட முடியும் என்றும் நோயாளி உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மருத்துவமனை ஊழியர்களுக்கும் நோயாளியின் உறவினர்களுக்கும் இடையே சண்டை வந்தது. இதனை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியையும் அவருடைய உறவினர்களும் கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நோயாளி உயிரிழந்ததாகவும், மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறாது. 300 ரூபாய் எண்ட்ரி கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளி ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் உபி மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

இதுவரை மின்கட்டணமே கட்டாதவருக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம்: கரூர் கூலித்தொழிலாளி அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்க மின் வாரிய ஊழியர்கள் வரவில்லை. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு

தமிழகத்தில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா: 16 நாட்களில் மட்டும் 50 ஆயிரம்

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது என்பதும் தமிழகத்தின் மொத்த பாதிப்பு

கொரோனா விஷயத்தில் மகிழ்ச்சி செய்தி: சுதந்திரத் தினத்தன்று விடிவு வரும்!!! ICMR அறிவிப்பு!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வெடிமருந்து வைத்து கொல்லப்பட்ட கேரள யானையை போல மேலும் ஒரு துயரச்சம்பவம்!!!

கேரளாவில் கடந்த மாதம் அன்னாசி பழத்தில் வைக்கப் பட்ட வெடிமருந்தால் ஒரு யானை அநியாயமாக உயிரிழந்தது.

நீங்கள்ல்லாம் நல்லா இருப்பிங்களாடா? கவினின் ஆவேச பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏழு வயதுச் சிறுமியான ஜெயப்பிரியா, 3 காமக் கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.