போதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்!

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

கடந்த சில மாதங்களாக திரையுலகினர் இடையே போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி உள்பட ஒருசில நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் பவன் சவுரியா என்பவருக்கு டாக்டர் லிகிதா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்ய இரு குடும்பத்தின் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அப்போது போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நடிகர் பவனுக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகப்பட்ட மணமகள் வீட்டார் திடீரென நிச்சயதார்த்தத்தை நிறுத்தினர்

இதனை அடுத்து இரு தரப்பினரும் கடந்த சில மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்போது எளிமையாக நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது. இது குறித்து நடிகர் பவன் சவுரியா கூறியபோது, ‘எனக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகப்பட்டு மணமகள் வீட்டினர் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினார். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்

ஆனால் நான் என்னுடைய பழக்க வழக்கத்தை லகிதாவிடம் கூறி புரிய வைத்தேன். எனக்கு எந்த போதைப்பழக்கமும் இல்லை என்பதை விளக்கினேன். லகிதா டாக்டர் என்பதால் புரிந்துகொண்டார் எனக்கு போதை பழக்கம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே தற்போது மணமகள் குடும்பத்தார் நிச்சயதார்த்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். எளிமையாக எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. எங்களது திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடக்கும் என்று அவர் கூறினார்
 

More News

குஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி?

கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

போதை பத்தல... சானிடைசர் குடித்த 7 பேர் பலி... பரபரப்பு சம்பவம்!!!

இந்தியாவில் ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. அப்போது சிலர் போதைக்காக சானிடைசரை அருந்தி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிவர் புயலை எதிர்க்கொள்ள தயாராகும் தமிழக அரசு… மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்தே தமிழக அரசு பல்வேறு தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாலாஜி-ஷிவானி காதலின் ரகசியத்தை உடைத்த சுசி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி-ஷிவானி காதல் குறித்த காட்சிகள் கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த காதல் வழக்கம்போல் முந்தைய சீசன்களில் இருந்த செட்டப் காதல் தான் என்பதை

வங்கக்கடலில் நிவர் புயல்: சென்னை அருகே கரை கடக்குமா?

தென்மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு சமீபத்தில் உருவானதை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக