close
Choose your channels

3-வது மனைவியை விவாகரத்து செய்கிறாரா ஸ்டார் நடிகர்? இணையத்தில் வைரலாகும் தகவல்

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நடிகர் பவண் கல்யாண் தன்னுடைய மனைவி ஆனா வெஸ்வெனாவை விட்டு பிரிந்து விட்டதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் பதட்டம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் நடிகரான சிரஞ்சீவியின் சொந்த தம்பி பவண் கல்யாணும் பிரபல நடிகராக வலம்வருகிறார். இவர் தமிழில் வெளியாகி ஹிட் அடித்த பல ரீமேக் படங்களில் நடித்து பிரபலமானார். சினிமாவைத் தவிர அரசியலிலும் ஆர்வம் காட்டிவந்த அவர் ஜனசேனா எனும் கட்சியைத் துவங்கி காரசாரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மேடை பேச்சுகளுக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

சினிமாவில் கடந்த 1997 இல் தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய அவர் அதே ஆண்டில் நந்தினி எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர் தன்னுடன் நடித்த நடிகை ரேனு தேசாய் என்பவரும் நெருக்கமான பழகி வருவதாக அவருடைய மனைவி கடந்த 2004 இல் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு விசாரணை எல்லாம் நடைபெற்று இறுதியில் கடந்த 2007 இல் நந்தினியிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற அவர் நடிகை ரேனு தேசாயை முறையாக திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடிகை ரேனு தேசாயை விட்டு பிரிந்த நடிகர் பவண் கல்யாண் கடந்த 2012 இல் மீண்டும் விவாகரத்துப் பெற்றார். இந்நிலையில் ‘டீன் ஸ்டார்’ எனும் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்த நடிகர் பவண் கல்யாண் அங்கு ஆனா வெஸ்வெனாவை சந்தித்து காதலில் விழுந்ததாகவும் சில ஆண்டுகள் காதலித்துவந்த இவர்கள் கடந்த 2013 இல் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 10 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்துவந்த இந்தத் தம்பதிகளுக்கு போலேனா அஞ்சனா பவோனோவா என்ற மகளும் மார்க் ஷங்கர் பவோனோவாவிச் என்ற மகனும் இருக்கின்றனர். முன்னதாக ஆனா, நடிகர் பவண் கல்யாணை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசித்து வந்ததாகவும் தற்போது அவர் ரஷ்யாவிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிரஞ்சிவி குடும்பத்தில் நடைபெற்ற எந்த விழாக்களிலும் நடிகர் பவண் கல்யாணின் மனைவி ஆனா கலந்து கொள்ளவில்லை. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விரைவில் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என்பதுபோன்ற தகவல்கள் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.