close
Choose your channels

பிரபல நடிகருக்கு பேனர் வைக்கும்போது நடந்த விபத்தில் 4 பேர் பலி: போனிகபூர் இரங்கல்

Wednesday, September 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு கட்-அவுட் வைத்த ரசிகர்கள் 4 பேர் விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும் ஜனசேவா என்ற கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம் என்ற பகுதி அருகே ஜனசேவா கட்சித் தொண்டர்கள் மற்றும் பவன்கல்யாண் ரசிகர்கள் நேற்று இரவு பேனர்களை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது பேனரில் உள்ள இரும்பு கம்பி ஒன்று மின்சார வயரில் சிக்கியது. இதனால் மின்சாரம் பாய்ந்து 7 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்ததாகவும் மொத்தம் நான்கு பேர் பரிதாபமாக பலியானதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் தற்போது ’வாகே சாகப்’ என்ற படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் படக்குழுவினர் சார்பில் இறந்தவர்களின் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என்றும் போனிகபூர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.