கஞ்சா போதை.. பெண்ணிடம் சில்மிஷம்.. அடித்து உதைத்த பொதுமக்கள்.

சென்னையில் போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற இளைஞர்களை பொது மக்கள் அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் சுரங்க பாதை அமைந்துள்ளது. அங்கு பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது கஞ்சா, மது அருந்தி விட்டு மூன்று இளைஞர்கள் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் அப்பெண்ணிடம் மூவரில் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். மற்ற இரு இளைஞர்களும் பெண்ணை சுற்றி நின்று கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் பதற்றமடைந்த பெண் கூச்சலிட்டார். இதைக் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அவர்கள் மூன்று இளைஞர்களையும் பிடித்து அடித்து உதைத்தனர். மூவரையும் பீர்க்கன்கரணை போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், குற்றவாளிகள் படப்பையை சேர்ந்த அலெக்ஸ்(19), செந்தில் குமார்(19), பாலாஜி(19) என்று கண்டறிந்தனர்.
அவர்கள் போதையில் இருந்ததையும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொது இடத்தில் போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு தொந்தரவு செய்பவர்களை ஓரளவுக்குத் தான் பொறுமையாக பொது மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

 

More News

மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த ஆரம்பத்தில் காமெடி கலந்த ரொமான்ஸ் திரைப்படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்',

தனுஷ்-மாரி செல்வராஜ் திரைப்படம் குறித்த முக்கிய தகவல்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய சுருளி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும்

'பிக்பாஸ் 3' நடிகரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகரும் இயக்குனருமான சேரனின் அடுத்த திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்பமயமாகும் பூமி. உணவைத் தேடி ஊருக்குள் வந்த பனிக்கரடிகள்.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50க்கும் மேற்பட்

என்கவுண்டர் போலீஸார் புகைப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் பெண்கள்

ஐதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர்களை இன்று அதிகாலை