ராதாரவிக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா?

நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா ரசிகர்களும், திரையுலகினர்களும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், திமுக அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இருப்பினும் ராதாரவி மீது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கின்றது. ராதாரவியின் பேசியதை விட அவரது இந்த அருவருப்பான பேச்சுக்கு கைதட்டியவர்களுக்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள 'ஐரா' படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், 'உன்னை மாதிரி ஆளுங்கனாலதான் ஃபேமிலியை சப்போர்ட் பண்ணனும் நினைக்கின்ற பொம்பளைங்க வெளியே போய் நிம்மதியாக வேலை செய்ய முடியலை' என்று நயன்தாரா பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் 'ராதாரவிக்கு நயன்தாரா கொடுத்த பதிலடியாகவே கருதுகின்றனர். சரியான நேரத்தில் இந்த வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது

மேலும் இந்த விவகாரம் குறித்து நயன்தாரா இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி மீது திமுக அதிரடி நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி,  நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்

மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்த கமல்

கடந்த 20ஆம் தேதி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான க

கமல்ஹாசன் கூட்டத்தை தடுத்து நிறுத்திய பறக்கும் படை: பெரும் பரபரப்பு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மக்களவை வேட்பாளர்களின் முதல் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று கோவையில் நடைபெறும்

நயன்தாரா - ராதாரவி பிரச்சனை குறித்து ராதிகா!

நேற்று நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியது,

ராதாரவி பேச்சுக்கு விக்னேஷ் சிவன் ரியாக்சன்!

நேற்று நடைபெற்ற நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தது