3000 முத்தங்களுடன் ஸ்டாலின் புகைப்படம்.....! பாராட்டும் நெட்டிசன்கள்....!

பெரம்பலூர் மாவட்டத்தில், வாலிகண்டபுரம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் ராமச்சந்திரன். இவருடைய மகன் நரசிம்மன் (20), கோவையில் உள்ள ரங்கநாதன் ஆர்கிடெக்சர் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகின்றார்.
சிறுவயதிலிருந்தே நரசிம்மனுக்கு ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. பள்ளியிலிருந்தே பலவகையான வித்தியாசமான ஓவியங்கள், இயற்கை காட்சிகள், பறவையினங்கள், விலங்குகள் போன்றவற்றை, ஓவியமாக வரைவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் நரசிம்மன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவரது ஊரான வாலிகண்டபுரத்தில் வாலீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலின் முன் 16 அடி உயரம், 8.5.அடி அகலம் உடைய துணியை வைத்து, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் வரைபடத்தை வரைந்துள்ளார். ஆனால் இந்த ஓவியம் வித்தியாசமானதாகும், பாத்திரம் ஒன்றில் வண்ண சாயத்தை வைத்து, அதை உதடுகளால் எடுத்து, துணியில் முத்தமிட்டு இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். அதுவும் 3000 முறை முத்தமிட்டு, இந்த ஓவியத்தை நிறைவு செய்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கும், தனது படைப்பை அனுப்பியுள்ளார். கெமிக்கல் கலக்காத'பிக் அப்' என்ற பெயிண்ட் வகையைத் தான் இதில் பயன்படுத்தியுள்ளார்.

இதேபோல் தஞ்சை பெரிய கோயில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்ட ஓவியங்களை, தன் மூக்கினால் வண்ணத்தை தொட்டு வரைந்துள்ளார். மாணவரின் கலைத்திறமையை பாராட்டி, பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் இவருக்கு பரிசு வழங்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பதும் கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு' என்ற நிகழ்ச்சியின்

மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்....! சீமான் அறிக்கை....!

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினத்தில் இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் உள்ளது.

இப்போது புரிகிறதா? ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்!

அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக இன்று காலை வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தாத்தாவாகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கார்த்திக் நரேனின் 'நரகாசுரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான 'துருவங்கள் பதினாறு' என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் 'நரகாசுரன்'