ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 05 2018]

பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பதால் சுற்றுச்சுழல் மாசு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரித்து வரும் நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவ்ரி மாதம் 1ஆம் தேதி தமிழகத்தில் பிளாஸ்டி பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன்கீழ் இன்று பேசிய முதல்வர், '2019ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாகவும், பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பாக்கு மட்டை, துணி பைகள் உபயோக ஊக்குவிக்கப்படும் என்றும் முதல்வர் மேலும் கூறியுள்ளார்,.

மக்காத பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர் குவளைகள், தண்ணீர் குவளைகள், பாக்கெட்டுகள், உறிஞ்சு குழல், கைப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் தயாரிக்க, விற்பனை செய்ய, சேமிக்க, பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தனது உரையில் தெரிவித்தார்.

More News

அனிதாவும், ப்ரதீபாவும் வஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டனர்: ஜிவி பிரகாஷ்

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடவடிக்கையால் கடந்த ஆண்டு அரியலூர் அனிதாவும், இந்த ஆண்டு விழுப்புரம் பிரதீபாவும் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர்.

வீரனுக்கு தலைவனுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறிய தனுஷ்

நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்

'காலா'வுக்கு எதிர்ப்புகள் இவ்வளவுதானா? ரஜினிகாந்த் ஆச்சரியம்

'காலா' படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் எதிர்ப்புகள் தான் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கட்டிப்பிடி வைத்தியதால் காவிரி வருமா? கமலை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயகுமார்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து காவிரி நீர் குறித்து ஆலோசனை செய்தார்.

மாணவி பிரதீபா தற்கொலை: ரஜினிகாந்த் இரங்கல்

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட விழுப்புரம் மாணவி பிரதீபாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.