close
Choose your channels

கட்டிப்பிடி வைத்தியதால் காவிரி வருமா? கமலை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயகுமார்

Tuesday, June 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து காவிரி நீர் குறித்து ஆலோசனை செய்தார். இந்த சந்திப்புக்கு தமிழக அரசியல்வாதிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறிய தமிழக அமைச்சர் ஜெயகுமார், 'காவிரி விவகாரம் தொடர்பாக கமல் அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல், சினிமா பாணியில் நடந்து கொள்கிறார். நீண்டகால சட்டப்பேராட்டம் காரணமாக மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இனி நீரை திறக்கும் அதிகாரம் ஆணையத்திடம் மட்டுமே இருக்கும்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் கமல் உள்ளார். வசூல்ராஜா பட பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா? என்று கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.