close
Choose your channels

ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் எடுத்த முடிவு என்ன? அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

Saturday, April 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்த பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டு கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது என, பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளதாகவும், வளர்ந்த நாடுகளை விட இந்தியா எடுத்த நடவடிக்கை சிறப்பானது என்றும் ஊரடங்கை தொடராவிட்டால் இதுவரை எடுத்த நடவடிக்கை வீணாகி விடும் என்றும், நிலைமை கட்டுக்குள் வைக்க ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும், இந்த உரையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.