உண்மையில் நடந்தது இதுதான்.. எச்சரித்து அனுப்பினோம்.. சரண்யா பார்க்கிங் பிரச்சனை குறித்து காவல்துறை..!

  • IndiaGlitz, [Tuesday,April 02 2024]

நடிகை சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதேவி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த புகார் குறித்து விசாரித்த போது ’சரண்யா பொன்வண்ணனின் மகள் மற்றும் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், சரண்யா உறவினரின் காரை சேதப்படுத்தியதாகவும் தெரியவந்தது.

அது மட்டுமின்றி வாடா போடா என்று சரண்யா உறவினரை அவமரியாதையாக ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் பேசியதாகவும் இதை தட்டிக் கேட்க வந்த சரண்யா மற்றும் அவரது கணவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அது மட்டும் இன்றி ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யா குடும்பத்துக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்ற குடியிருப்புவாசிகள் இடமும் எப்போதும் பிரச்சனை செய்து கொண்டே இருப்பார்கள் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து தவறு உங்கள் மேல் தான் இருக்கிறது என்று ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினரை எச்சரித்து அனுப்பி உள்ளோம் என்றும் சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதேவி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்’ என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More News

கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர கார்.. வாங்கியவுடன் கதறியழுத அர்ச்சனா..!

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கி உள்ள நிலையில் அந்த காரை வாங்கி உடன் அவர் உணர்ச்சிவசப்பட்டு

திரையுலகில் அறிமுகமாகும் இயக்குனர் ஹரி வாரிசு.. ஒரே நேரத்தில் இரு அவதாரங்கள்..!

பிரபல இயக்குனர் ஹரியின் மகன் நடிகர் மற்றும் இயக்குனர் என ஒரே நேரத்தில் இரு அவதாரங்களில் திரையுலகில் அறிமுகம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லியாக களமிறங்கும் ஆண்ட்ரியா.. இளம் ஹீரோ தான் நாயகன்.. வொர்க் அவுட் ஆகுமா?

நடிகை ஆண்ட்ரியா தற்போது 38 வயதில் இருக்கும் நிலையில் 33 வயது இளம் ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் வொர்க் அவுட் ஆகுமா என கேள்வி எழுப்பப்பட்டு

ஜோவிகாவுக்கு முன்பே திரையுலகில் அறிமுகமாகும் வனிதா விஜயகுமார் வாரிசு.. இயக்குனர் இந்த பிரபலமா?

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை ஹீரோயினாக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஜோவிகாவுக்கு முன்பே அவரது குடும்ப உறுப்பினர்களில்

'இந்தியன் 2' ரிலீஸ் தேதி இதுவா? அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களாக 'இந்தியன் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்பட்டது.