close
Choose your channels

உண்மையில் நடந்தது இதுதான்.. எச்சரித்து அனுப்பினோம்.. சரண்யா பார்க்கிங் பிரச்சனை குறித்து காவல்துறை..!

Tuesday, April 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதேவி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த புகார் குறித்து விசாரித்த போது ’சரண்யா பொன்வண்ணனின் மகள் மற்றும் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், சரண்யா உறவினரின் காரை சேதப்படுத்தியதாகவும் தெரியவந்தது.

அது மட்டுமின்றி வாடா போடா என்று சரண்யா உறவினரை அவமரியாதையாக ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் பேசியதாகவும் இதை தட்டிக் கேட்க வந்த சரண்யா மற்றும் அவரது கணவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அது மட்டும் இன்றி ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யா குடும்பத்துக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்ற குடியிருப்புவாசிகள் இடமும் எப்போதும் பிரச்சனை செய்து கொண்டே இருப்பார்கள் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து தவறு உங்கள் மேல் தான் இருக்கிறது என்று ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினரை எச்சரித்து அனுப்பி உள்ளோம் என்றும் சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதேவி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்’ என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.