நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்: அதிர்ச்சியில் பெற்றோர்!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த ஞாயிறன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு எழுதிய 3 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்ற செய்தி தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் திடீரென மாயமாகி உள்ளது அவரது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சின்ன அறியாகவுண்டம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஸ்வேதா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் அவர் நீட் தேர்வு எழுதிய நிலையில் திடீரென நேற்று காலை சுவேதா வீட்டிலிருந்து மாயமானதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரமாக தேடியும் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனை அடுத்து ஸ்வேதாவின் தந்தை நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் தனிப்படை அமைத்து மாணவி ஸ்வேதாவை தேடி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.