close
Choose your channels

பெண் போலீசாரிடம் ஆபாச பேச்சு: சஸ்பெண்ட் ஆன போலீஸ் எஸ்பி

Tuesday, April 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க போலீசார் இரவு பகல் பாராமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மக்களை காக்க வேண்டிய எஸ்பி அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி பெண் போலீசாரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரியைச் சேர்ந்த ஐஆர்பிஎன் பிரிவு எஸ்பி சுபாஷ் என்பவர் அவருக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து இதுகுறித்து பெண் போலீசார் புகார் அளித்தனர்

இந்த புகார் சம்பந்தமாக பெண் போலீசாரிடமும் எஸ் பி சுபாஷிடமும் விசாரணை செய்தபோது பெண் போலீசாரிடம் எஸ்பி சுபாஷ் ஆபாசமாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் எஸ்பி சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சுபாஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரிகள் புதுச்சேரி உள்துறைக்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை அடுத்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் ஒப்புதல் பெற்று எஸ்பி சுபாஷை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. எஸ்பி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.