close
Choose your channels

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலையில் திடுக்கிடும் திருப்பம்

Monday, April 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் நாட்டையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை கல்லூரி ஒன்றில் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போனதால் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே அந்த மாணவி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கல்லூரி மாணவியின் செல்போனில் கிடைத்த தகவலின்படி அவருடைய உறவினர் சதீஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தது

சிறு வயது முதலே கல்லூரி மாணவியை சதீஷ் காதலித்து வந்ததாகவும், ஆனால் அவருடைய பெற்றோர் சம்மதிக்காததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் கல்லூரி மாணவிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கவிருப்பதை அறிந்ததும் ஆத்திரத்தில் மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் சதீஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.