மீண்டும் தொடங்கும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு: பரபரப்பு தகவல் 

பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறவில்லை என்பது தெரிந்ததே. தற்போது படப்பிடிப்பு நடத்த மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு இம்மாத மத்தியில் தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘பொன்னின் செல்வன்’ படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இந்த செட்களில் நவம்பர் இரண்டாவது வாரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உண்மையில் இந்த படத்தை அவர் இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்பட பல நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஒருசில நாடுகளின் அரசு கெடுபிடிகள் காரணமாக தற்போது செட் அமைத்து அதில் படமாக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இரண்டு பாகங்களாக வெளி வர உள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சிம்புவுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு ஆச்சரிய தகவல்!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சிம்புவுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாக அவரது உடற்பயிற்சி பயிற்சியாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த வாலிபர்: தட்டிக்கேட்ட கணவருக்கு அடி உதை!

விழுப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும் போது மொபைல் போனில் வீடியோ எடுத்த வாலிபர் ஒருவரை தட்டிக்கேட்ட அவரது கணவருக்கு அடி உதை கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரஜினி வீட்டிற்கு வந்து குவியும் அஞ்சல் அட்டைகள்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்த வாத, விவாதங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது.

முட்டையில் ஓவியம்.. சர்வதேச விருது வென்ற கோவை மாணவி!!!

முட்டையைப் பார்த்தாலே ஆம்லேட் போட்டு ஒருபிடி பிடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த முட்டையில் 50 தேசிய தலைவர்களின்

பா ரஞ்சித் உடன் மோதும் பிரபல நடிகர்: வைரலாகும் புகைப்படம் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' என்ற படத்தை கடந்த 2018ஆம் ஆண்டு இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே