உலக அளவில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு.!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 500 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், முதல் பாகம் போலவே இந்த படமும் 500 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’பொன்னின் செல்வன் 2’ திரைப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் பட குழுவினர் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் தற்போது இந்த படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

More News

மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்ற தமிழ் நடிகை... பாராட்டும் ரசிகர்கள்!

சமீபத்தில் திரைப்பட புரமோஷன் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கயல் ஆனந்தி தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ்

மேஜிக் உலகத்திற்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பன்முகத் திறமையோடு போல்டாக வலம்வரும் நடிகை ஆண்ட்ரியா

மீண்டும் விவாகரத்துக் கொண்டாட்டம்… கடைசியில் கோர விபத்தில் முடிந்த சம்பவம்!

சமீபகாலமாகத் தங்களது பிடிக்காத திருமணங்களில் இருந்து விவாகரத்துப் பெறுவதைச் சிலர் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்கின்றனர்.

மனைவியை 'சாப்பாட்டு பக்கி' என கூறிய தயாரிப்பாளர் ரவீந்தர்.. வைரல் புகைப்படம்..!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னையும் தனது மனைவியையும் சாப்பாட்டுப் பக்கி எனக் கூறி பதிவு செய்துள்ளது பரபரப்பை

திருமணமான ஒரே மாதத்தில் பிரிவா? பிரபல சீரியல் ஜோடி பற்றிய அதிர்ச்சி தகவல்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சிப்பிக்குள் முத்து‘ சீரியல் பிரபலங்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.