close
Choose your channels

மேஜிக் உலகத்திற்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரல் புகைப்படங்கள்!

Monday, May 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமா வட்டாரத்தில் நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பன்முகத் திறமையோடு போல்டாக வலம்வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா பின்பு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்‘ திரைப்படம் மூலம் நடிகையானார். அதைத் தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மங்காத்தா’, ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்களில் போல்டான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு நல்ல வரவேற்பை கிடைத்தது. மேலும் ‘தரமணி’, ‘வடசென்னை’ போன்ற படங்களில் போல்டான கதாபாத்திரம், வித்தியாசமான நடிப்பு என்று தமிழ் திரையுலகில் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதைத்தவிர ‘மாளிகை’, ‘கா’ போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். அதேபோல தொடர்ந்து பாடகியாக மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். இப்படி நடிகை, பாடகி என இருவேறு பரிமாணங்களில் தொடர்ந்து இயங்கிவரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது தனியாக சுற்றுலா வந்திருப்பதாகக் கூறி பூடானுக்கு சென்றுள்ள அழகிய புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், பூடானில் அனுபவிக்க 3 நிலைகள் உள்ளன. ஒன்று ஒட்டுமொத்த இமயமலையின் ராஜ்ஜியத்தையும் அதன் நிலப்பரப்புகளையும் கண்டுகளிக்க முடியும். அடுத்து மலையேற்றம், நடை பயணம் மூலம் சுத்தமான காற்றை அனுபவிக்கலாம். அடுத்து பௌத்த பூமியான இதில் ஆன்மீகத்தையும் உணர முடியும். இப்படியொரு மறக்க முடியாத பயணத்திற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.