வந்தியத்தேவனும், வானில் மாயாஜாலமும்: வைரலாகும் பொன்னியின் செல்வன் புகைப்படம்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் அஹில்யா என்ற கோட்டையின் அருகே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக ஏற்கனவே நடிகை த்ரிஷா மற்றும் விக்ரம் உள்ளிட்டோர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் பொன்னியின் செல்வன் கதையின் நாயகனாக வந்தியதேவன் கேரக்டரில் நடித்து வரும் கார்த்தியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

நீல வானத்தில் மேகங்கள் கவிதை நடைபோடும் அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள அவர், வானில் ஒரு மாயாஜாலம் என்று இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து வந்தியத்தேவனின் மாயாஜால புகைப்படம் வைரலாகி வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

CWC அஸ்வின் கைதாகப்போகிறாரா....? உணர்ச்சியில் அவரே ஷேர் செய்த பதிவு.....!

குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிக

மாலத்தீவில் சன்னிலியோன்: வண்ண வண்ண கிளாமர் புகைப்படங்கள்!

கடந்த சில மாதங்களில் காஜல் அகர்வால் உள்பட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பலர் மாலத்தீவு சென்று வந்தனர் என்பதும் அவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படங்கள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது என்பதும் 51 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சமீபத்தில்

மோகன்ஜி படத்தை தடை செய்ய வேண்டும்.....! சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் புகார்....!

இயக்குனர் மோகன் ஜி-யின் ருத்ரதாண்டவம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, டிஜிபி அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர் திருமணம்: சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து

தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் சிவகார்த்திகேயன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்