வெளிநாட்டுக்கு செல்கிறதா 'பொன்னியின் செல்வன்' படக்குழு? பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Thursday,September 03 2020]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காட்டில் நடந்தது. அதன்பின் சென்னை திரும்பிய படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாரான போது திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. முதலில் புனே மற்றும் ஹைதராபாதில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி படக்குழு அடுத்ததாக இலங்கை செல்ல இருப்பதாகவும் அங்கு ஒரு மாத காலத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி மற்றும் மந்தாகினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார், குந்தவை கேரக்டரில் த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஆண்ட்ரியாவும் இல்லை, ராஷிகண்ணாவும் இல்லை: 'அரண்மனை 3' படத்தில் பேய் யார்?

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம்

கார் பைக்கை அடுத்து சிலம்பம் கற்கும் பிக்பாஸ் நடிகை

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை குஷி ஆக்கி வந்தனர்.

கொரோனாவால் வியாபாரம் இல்ல… ஐஸ் கிரீமில் விஷம் கலந்து தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்!!!

கேரள மாநிலம் கண்ணூரில் கந்துவட்டி நெருக்கடி காரணமாக சொப்னா என்ற இளம் வயது பெண்மணி ஒருவர் தனது 2 மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

என்னைக் கொல்ல சதி நடக்கிறது– ட்ரம்ப் மீது பரபரப்பு புகார் கூறிய இன்னொரு நாட்டு அதிபர்!!!

வெனிசுலா நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ தன்னைக் கொல்ல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்