close
Choose your channels

வெளிநாட்டுக்கு செல்கிறதா 'பொன்னியின் செல்வன்' படக்குழு? பரபரப்பு தகவல் 

Thursday, September 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காட்டில் நடந்தது. அதன்பின் சென்னை திரும்பிய படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாரான போது திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. முதலில் புனே மற்றும் ஹைதராபாதில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி படக்குழு அடுத்ததாக இலங்கை செல்ல இருப்பதாகவும் அங்கு ஒரு மாத காலத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி மற்றும் மந்தாகினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார், குந்தவை கேரக்டரில் த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.