பயங்கர விபத்தில் சிக்கிய 'பொன்னியின் செல்வன்' பாடகி.. என்ன ஆச்சு..?

  • IndiaGlitz, [Sunday,May 07 2023]

'பொன்னியின் செல்வன்’ உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பாடகி சமீபத்தில் பயங்கர விபத்தில் சிக்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் உட்பட பல திரைப்படங்களிலும் தனி ஆல்பங்களில் பாடியவர் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.

இவர் மலேசியா செல்வதற்கு விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தான் சென்ற காரில் ஏர்பேக் வசதி இருந்ததை அடுத்து அந்த காரில் சென்ற தான் உட்பட சக பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்

இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் தான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது தனது அதிர்ஷ்டமே என்றும் கடவுளுக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘காதோடு சொல்’ என்ற பாடலையும் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கன்னட பதிப்பில் ஒரு பாடலையும் ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். மேலும் ’வந்தா ராஜாவாதான் வருவேன்’, ’வெந்து தணிந்தது காடு’ உள்பட ஒருசில படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காதலனை கட்டிப்பிடித்து கொஞ்சும் ப்ரியா பவானி சங்கர்... வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது காதலனை கட்டிப்பிடித்து கொஞ்சம் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டைட்டான டிரஸ்.. தலைகீழாக போஸ்.. ரம்யா பாண்டியனின் வேற லெவல் யோகா வீடியோ..!

நடிகையும்,  பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பாக அவர் ஒர்க் அவுட்

இறந்த பிறகும் பலருக்கு உதவியாக இருந்த மனோபாலா.. மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்..!

தமிழ் திரை உலகின் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா கடந்த சில நாட்களுக்கு முன்னாள் உயிரிழந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சூர்யாவின் 'கங்குவா' குறித்த சூப்பர் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக

ஆகஸ்ட் முதல் அக்டோபர்  வரை.. சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.