close
Choose your channels

அவர்தான் 'செல்பி'யை கண்டுபிடித்திருப்பாரோ? பூஜாகுமாரின் மலரும் நினைவுகள்

Saturday, August 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த ’காதல் ரோஜாவே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் நடிகை பூஜாகுமார் பிரபலமானது உலகநாயகன் கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ படத்தில் தான். இந்த படத்திற்கு பின்னர் உத்தம வில்லன்’ ’விஸ்வரூபம் 2’ உள்பட பல திரைப்படங்களில் பூஜா குமார் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர் நடிகைகள் பலர் தங்களுடைய பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்து வரும் நிலையில் பூஜா குமாரும் தான் குழந்தையாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் குழந்தை பூஜா குமார் அவரது தந்தையை பார்ப்பது போலவும், அவரது தந்தையோ அவரது தாயை பார்ப்பது போலவும், தாய் குழந்தை பூஜாகுமாரை பார்ப்பது போலவும் உள்ளது. இந்த புகைப்படம் எப்போது யாரால் எடுக்கப்பட்டது என்று தனது தந்தையிடம் பூஜா கேட்பதற்கு எனக்கு ஞாபகம் இல்லை என்று அவரது தந்தை கூறியதாகவும், இருப்பினும் இந்த புகைப்படம் மிக அருமை ஆக உள்ளது என்றும் ஒருவேளை செல்பியை இந்த புகைப்படக்காரர் தான் கண்டுபிடித்து இருப்பாரோ என்றும் அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பூஜா குமார் பதிவு செய்துள்ள இன்னொரு புகைப்படத்தில் தனது பாட்டிக்கு 92 வயது ஆகிவிட்டதாகவும், அவரது பிறந்த நாளில் நேரில் வாழ்த்து கூற முடியவில்லை என்றும், இருப்பினும் விரைவில் அவரை பார்த்து வாழ்த்து கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.