மாஸ் ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா!

  • IndiaGlitz, [Tuesday,September 28 2021]

நடிகர், இயக்குனர் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது ’பாகீரா’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவைகளில் ஒரு சில படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறிமுக இயக்குனர் ஒருவரின் மாஸ் ஆக்ஷன் திரைப்படத்தில் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அறிமுக இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்

இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் இதுவரை காணாத வகையில் புதுமையானதாக இருக்கும் என்றும் இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் ஒளிப்பதிவில், எஸ். என். பிரசாத் இசையில், ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

More News

மகனுக்கு ஞானஸ்தானம் செய்த சாண்டி: வைரல் புகைப்படங்கள்

பிரபல நடன இயக்குனர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதையும் தனது மகனுக்கு அவர் ஷான் மைக்கேல் என்ற பெயரை

'வெந்து தணிந்தது காடு' நாயகியா இவர்? கலக்கும் கிளாமர் போட்டோஷூட்!

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் அவர்களின் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில்

தாய் ஷோபாவை வாசலில் நிற்க வைத்தாரா விஜய்? எஸ்.ஏ.சி வீடியோ வைரல்!

தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் தனது வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில் அதற்கு விளக்கம் அளித்து

வீட்டை விட்டு திடீரென ஓடிப்போன இளம் நடிகை!

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டதாக இளம் நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: சமந்தா

பிரபல நடிகை சமந்தா ஒரு பக்கம் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தான் வளர்க்கும் நாய்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய அவர்