close
Choose your channels

மீண்டும் இணையும் 'மின்சார கனவு' கூட்டணி: இயக்குனர் இவரா?

Saturday, September 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1997ஆம் ஆண்டு பிரபுதேவா, அரவிந்த் சாமி நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’மின்சாரகனவு’. இந்த நிலையில் இந்த படத்திற்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபுதேவா மற்றும் அரவிந்தசாமி இணையும் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் வெங்கட்பிரபு, அடுத்ததாக இந்த படத்தை இயக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா அல்லது ஏஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் நிதின் சத்யா என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் - இந்தியா திரைப்படமாக உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.