19 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்த 38 வயது எம்.எல்.ஏ: மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

19 வயது கல்லூரி மாணவி ஒருவரை 38 வயது எம்எல்ஏ ஒருவர் இன்று காலை திருமணம் செய்ததை அடுத்து கல்லூரி மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு 38 வயதாகிறது. இவர் கடந்த 5 ஆண்டுகளாக சௌந்தர்யா என்ற 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு சௌந்தர்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று காலை பிரபு மற்றும் சௌந்தர்யா திருமணம் அதிகாலை நடந்தது. 

இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தங்களது மகளை பிரபு எம்.எல்.ஏ கடத்தி விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமின்றி அவர் திடீரென பிரபுவின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் தங்களது மகளை பிரபு எம்எல்ஏ கடத்திவிட்டு சென்றுவிட்டதாகவும் சாதியை கூட தாங்கள் பொருட்படுத்தவில்லை என்றும் 38 வயதான எம்.எல்,ஏ, 19 வயது பெண்ணை திருமணம் செய்வது தான் தங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

வெறும் 50 ரூபாய்க்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன்: ஆச்சரிய தகவல்

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆயிரக்கணக்கில் செலவாகும் என்ற நிலையில் வெறும் 50 ரூபாய்க்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து தர இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது

தமன்னா விரைவில் குணமாக பிரபல இயக்குனர் வாழ்த்து!

பிரபல நடிகை தமன்னா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

பாஜகவில் இணைவதாக எழுந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குஷ்பு!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வரும் நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவில் இணைய இருப்பதாக வதந்திகள் பரவியது.

சிம்பு இல்லாமலேயே படப்பிடிப்பை தொடங்கிய சுசீந்திரன்: நாயகி யார்?

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் 'மாநாடு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சென்னை பெண் தொழிலதிபரின் ஆபாச படத்தை வைத்து மிரட்டிய வாலிபர்: வளைத்து பிடித்த கணவர்!

சென்னை பெண் தொழிலதிபர் ஒருவரின் ஆபாச படத்தை வைத்துக்கொண்டு மிரட்டியதோடு அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய வாலிபர் ஒருவரை பெண் தொழிலதிபரின்