close
Choose your channels

19 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்த 38 வயது எம்.எல்.ஏ: மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி

Monday, October 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

19 வயது கல்லூரி மாணவி ஒருவரை 38 வயது எம்எல்ஏ ஒருவர் இன்று காலை திருமணம் செய்ததை அடுத்து கல்லூரி மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு 38 வயதாகிறது. இவர் கடந்த 5 ஆண்டுகளாக சௌந்தர்யா என்ற 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு சௌந்தர்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று காலை பிரபு மற்றும் சௌந்தர்யா திருமணம் அதிகாலை நடந்தது. 

இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தங்களது மகளை பிரபு எம்.எல்.ஏ கடத்தி விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமின்றி அவர் திடீரென பிரபுவின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில் தங்களது மகளை பிரபு எம்எல்ஏ கடத்திவிட்டு சென்றுவிட்டதாகவும் சாதியை கூட தாங்கள் பொருட்படுத்தவில்லை என்றும் 38 வயதான எம்.எல்,ஏ, 19 வயது பெண்ணை திருமணம் செய்வது தான் தங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos