close
Choose your channels

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் கதை இதுவா? என்ஜினியரிங் மாணவர்கள் செம குஷி..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ’லவ் டுடே ’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் கதை என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் குறித்தது என்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அதன் பிறகு ’லவ் டுடே’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் 100 கோடி வசூல் செய்தது கோலிவுட் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கே மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் என்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாகவும் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் குறித்த வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.

’லவ் டுடே’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் நிச்சயம் இந்த படத்தையும் இதுவரை வெளியாகாத வித்தியாசமான கான்செப்ட்டில் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் என்ஜினியரிங் மாணவர்கள் செம குஷியாகியுள்ளனர்.

இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.