மீண்டும் தேசிய விருதை பெறுவாரா பிரகாஷ்ராஜ்?

  • IndiaGlitz, [Friday,July 03 2015]

கடந்த 2008ஆம் ஆண்டு பிரபல மலையாள மற்றும் தமிழ்ப்பட இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது என்ற மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்தது. காஞ்சிபுரம் பட்டு நூல் நெசவு மக்களின் கதையில் மிக அற்புதமாக நடித்திருந்த பிரகாஷ்ராஜுக்கு அதன்பின்னர் அதுபோன்ற ஒரு வேடம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அந்த குறையை போக்கும் வண்ணம் பிரகாஷ்ராஜ் மீண்டும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, 'பிரியதர்ஷனின் மிக அற்புதமான திரைக்கதை ஒன்றை நேற்றிரவு கேட்டேன். மீண்டும் காஞ்சிவரம் குழுவினர் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசனின் தூங்காவனம், ரஜினி -ரஞ்சித் படம் மற்றும் ஜாலி எல்.எல்.பி படத்தின் தமிழ் ரீமேக் என பிசியான ஷெட்யூலில் இருக்கும் பிரகாஷ்ராஜ், தனது விருப்பத்துக்குரிய இயக்குனர் பிரியதர்ஷனுக்காக அட்ஜெட்ஸ்ட் செய்து கால்ஷீட் கொடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. காஞ்சிவரம் படத்தில் பெற்ற தேசிய விருதை மீண்டும் இந்த புதிய படத்தின் மூலம் பிரகாஷ்ராஜ் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஜோதிகாவின் ஐம்பதும், சூர்யாவின் முப்பந்தைந்தும்

எட்டு வருடங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆன ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படம் இன்று 50வது நாளை கொண்டாடி வருகின்றது...

கார்த்தி-தமன்னா படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

நாகார்ஜுனா-கார்த்தி நடிக்கவிருக்கும் பிரமாண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்...

கமல்ஹாசனுடன் இணைகிறார் பாபிசிம்ஹா

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. கமல்ஹாசனின் 'உத்தம...

அஜீத்-ஸ்ருதிஹாசன் துபாய் பயணம்

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக 'தல...

திருமணம் ஆகி ஒன்றரை வருடத்தில் விவாகரத்து கோரும் நடிகர் கிருஷ்ணா

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகரும், பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான கிருஷ்ணா தனது மனைவியிடமிருந்து...