சினேகா-பிரசன்னா விவாகரத்தா? இந்த புகைப்படம் கூறும் உண்மை என்ன?

  • IndiaGlitz, [Monday,November 14 2022]

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான சினேகா மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்து பெற இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் ஒரே ஒரு புகைப்படம் மூலம் இந்த வதந்திக்கு முடிவு கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகா - பிரசன்னா ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார்கள் என்பதும் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.

இந்த வதந்திக்கு முடிவு கட்டும் வகையில் நடிகை சினேகா தனது சமூக வலைத்தளத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’ஹாப்பி வீக் எண்ட்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த ஒரு புகைப்படம் சினேகா-பிரசன்னா விவாகரத்து குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்பதை உறுதி செய்துள்ளது.

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் மகேஸ்வரியின் முதல் வீடியோ: என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. 

ரஜினியை அடுத்து 'லவ் டுடே' இயக்குனருக்கு வாழ்த்து கூறிய மாஸ் நடிகர்!

சமீபத்தில் வெளியான 'லவ் டுடே' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை செய்துவரும் நிலையில் இந்த படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து

மதுரை வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. காரை நிறுத்தி பார்த்து ரசித்த பிரபல நடிகர்!

மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பிரபல நடிகர் ஒருவர் காரை நிறுத்தி பார்த்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'ஆர்.ஆர்.ஆர் 2': எஸ்.எஸ்.ராஜமெளலி கூறிய சூப்பர் தகவல்!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர்

ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா? கதையை கேட்டு கண்கலங்கிய ரக்சிதா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள திருநங்கை ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா என அவருடைய காதல் கதையை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.